சிறந்த மொழிப்பெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுபெறும் நெல்லை பேராசிரியை விமலாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வோருக்கு சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமிலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்ற நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர் ப.விமலா, சாகித்யா அகாடமி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.