சியோல்: தென்கொரிய அதிபர் யூன்சுக் இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தென்கொரிய அதிபர் யூன்சுக் இயோல் கடந்த டிசம்பர் 3ம் திடீரென ராணுவ சட்டத்தை அறிவித்து நாட்டை பெரும் அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தினார். அவரை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய வாக்களித்தன. இந்நிலையில் ராணுவ சட்ட ஆணைக்கு எதிரான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
யூன்சுக் இயோல் சிறையில் அடைத்துவைக்கப்படாமல் விசாரணையை எதிர்கொள்வதற்கு அனுமதிக்கும் வகையில் அவரது கைது நடவடிக்கையை நீதிமன்றம் நேற்று முன்தினம் ரத்து செய்தது. இதனை தொடர்ந்து நேற்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
யூன்சுக் இயோலை முறையாக பதவியில் இருந்து நீக்குவதா என்பதை அரசியலமைப்பு நீதிமன்றம் ஆலோசித்து வருகின்றது. அவரது பதவி நீக்கத்தை நீதிமன்றம் உறுதி செய்தால் இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.
The post சிறையில் இருந்து வீடு திரும்பினார் தென்கொரிய அதிபர் appeared first on Dinakaran.