மதுரை: சிலை கடத்தல் வழக்கின் முதல்கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவுக்கு, சிபிஐ பதில் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஓய்வுபெற்ற டிஎஸ்பி காதர்பாட்ஷா, “சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளி தீனதயாளனை தப்பவைக்க ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் முயன்றார். இதற்கு இடையூறாக இருந்த என் மீது வழக்கு பதிவு செய்தார். இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் மீது புகார் அளித்தேன். இந்தப் புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கஉத்தரவிட வேண்டும்” என்று கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.