மதுரை :சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விதிகளை மீறும் வகையில்
செண்பகம்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லெம்பலக்குடி சுங்கச்சாவடி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தார். தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து சுங்கச்சாவடியை அகற்ற 2 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டனர்.
The post சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை அகற்ற ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.