‘அமரன்’ வெற்றி விழாவில் சிவகார்த்திகேயனின் அணுகுமுறை குறித்து தனது பேச்சில் புகழாரம் சூட்டினார் சாய் பல்லவி.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படம் வெளியாகி 100 நாட்கள் கடந்துவிட்டது. இதனைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் கலந்துக் கொண்ட விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.