மகாகவி பாரதியின் திருநாளை எட்டையபுரத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சீரும் சிறப்புமாக நடத்தினார். இதை அன்றைய அரசியல் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் பலரும் பாராட்டி சீராட்டினார்கள். சிவாஜி கணேசனுக்கு புகழ்மாலை சூட்டினார்கள்.
இதுகுறித்து, 1958-ல் ‘சுதேசமித்திரன்’ ஏட்டில் எட்டையபுரம் தி.சுவாமிநாதன் எழுதிய கட்டுரை வருமாறு:
“இவ்வருடம் (1958) பாரதி விழாவை என் சொந்தச் செலவில் நடத்துகிறேன். அனைவரும் திரண்டு வருக” என்று பத்திரிகைகளில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிக்கை விட்டிருந்தாரல்லவா? அவ்விழாவில் கலந்து கொள்ளத்தான் எட்டையபுரத்தை நோக்கி பாரதி அன்பர்கள் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள்.