சென்னை: சிவாஜி வீட்டின் மீது எந்த உரிமையும் இல்லை என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்னை இல்லம் மீது எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவாஜி பேரனும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்தின் நிறுவனம் ஜககால கில்லாடி என்ற படத்தை தயாரித்தது. படத்தை தயாரிக்க வாங்கிய ரூ.3.74 கோடி கடனை செலுத்தாததால் சிவாஜி வீட்டை ஐகோர்ட் ஜப்தி செய்ய உத்தரவிட்டிருந்தது. அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
The post சிவாஜி வீடு வழக்கு: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.