சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட். அவருக்கு பதிலாக அணியை இந்த சீசனில் தோனி வழிநடத்த உள்ளார். இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் சொல்லியுள்ளது என்ன என்பதை பார்ப்போம்.
ருதுராஜ் விலகலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதி செய்துள்ளார். இன்று சென்னை – சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உடனான ஆட்டத்தில் மீண்டும் கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.