ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்ற ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், "ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யியை சந்திக்க ஒரு வாய்ப்பை வழங்கியது," என்று தெரிவித்துள்ளார். மேலும், சந்திப்பு தொடர்பான படங்களையும் அதில் அவர் இணைத்துள்ளார்.