சென்னை : பொதுவெளியில் ஆபாசமாகவும், கீழ்த்தரமாகவும் பேசிய சீமான் ஒரு அரசியல் கட்சியின்
தலைவராக இருப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இப்படிப்பட்ட பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் எவ்வித இடமும் இருக்கக்கூடாது; தமிழ் தேசியம் என்பது பெண்களை ஆபாசமாகவும், பாலியல் வக்கிரத்தோடும் பேசுவதல்ல; பெண்களின் கண்ணியத்தை மதிக்கக்கூடியது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது : காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி appeared first on Dinakaran.