சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக வரும் ஏப்.25-ம் தேதிக்குள் தமிழக அரசு பொது ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடாவிட்டால், நீதிமன்றமே ஏலம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற உத்தரவிடக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.