தமிழகத்தைச் சேர்ந்த தேசியக் கட்சி விஐபியான அவர் அண்மையில் தனது எண்பதாவது பிறந்த நாளை சுமார் 30 விஐபிக்களை மட்டும் தனது தோட்டத்து வீட்டுக்கு அழைத்து அடக்கமாக கொண்டாடினார். அவர் அடக்கிவாசித்தாலும் அவர் மூலமாக கூட்டணியில் தங்களுக்கான ‘தொகுதியை’ பிடிக்க நினைக்கும் இரண்டு பேர் வேற லெவலுக்கு அசத்திவிட்டார்களாம்.
‘சீமை’ தொகுதியை குறிவைக்கும் அந்தக் கட்சியின் முன்னாள் கல்வித் தந்தை ஒருவர், தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு ‘சீமை’ கிராமத்தில் காரசாரமாய் கறிவிருந்து போட்டு அசத்தி இருக்கிறார். சுமார் ஆறாயிரம் பேர் பங்கேற்று ருசித்த அந்த விருந்து நடத்தப்பட்ட ஏரியாவைச் சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் ரேடியஸுக்கு கட்சிக் கொடிகள் கண்ணைப் பறித்தனவாம். விருந்துக்கான மொத்த செலவு 40 லகரமாம்.