பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் இந்தியா முழுவதும் எண்ணற்ற தலைவர்கள் போராடினர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். சொத்து சுகங்களை இழந்தனர். அந்த ஒப்பற்ற தியாகங்களின் விளைவால் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்திரம் கிடைக்கப் பெற்றது.
அதேநேரம் போராடிப் பெற்ற சுந்திரத்தை கொண்டாடுவதற்கு மாறாக, பஞ்சாப், வங்காளம் போன்ற மாகாணங்களில் ஏற்பட்ட இனக் கலவரங்கள் தலைவர்களை மட்டுமல்ல; மக்களையும் அச்சத்துக்கு உள்ளாக்கின. நகரங்கள் பற்றியெறிந்தன. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான சொத்துகள் சேதமடைந்தன. இந்த சம்பவங்கள் எல்லாம் மகாத்மா காந்திக்கு வேதனையை ஏற்படுத்தின.