
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களே பாக்கி இருக்கிறது. இதன் பணிகளை முடித்துவிட்டு, ரஜினி படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

