கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நேற்று அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர். அவர்களை பூமியே வரவேற்றது போல் உலகெங்கிலும் அவ்வளவு மகிழ்ச்சி. விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப அந்த 17 மணி நேர பயணம் முழுவதும் விஞ்ஞானிகள் பரபரப்பாகவே இருந்தனர். பூமிக்கு திரும்பிய அந்த தருணத்தில் சுனிதாவின் முகத்தில் சிரிப்பை பார்த்து அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு சிகிச்சை, பயிற்சி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி உள்ளனர். எனினும், விண்கலத்திலிருந்து வெளியேறிய அவர்களால் நிற்கவோ எழுந்து நடக்கவோ முடியாத நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது. முகம் வீங்கிய நிலையிலும் பார்வை மங்கியும் காணப்பட்டனர்.