புதுடெல்லி: நாட்டின் சுற்றுச்சூழல் நிர்வாகத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும், அதன் தீர்ப்புகள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் 'சுற்றுச்சூழல் – 2025' எனும் இரணடுநாள் தேசிய மாநாட்டை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு புதுடெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நாட்களும், அவற்றின் நோக்கங்களையும், திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கின்றன. விழிப்புணர்வு மற்றும் அனைவரின் பங்களிப்பின் மூலமே சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்பாடும் சாத்தியமாகும்.