சென்னை: “சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசு அறிவிக்கின்ற அறிமுகப்படுத்தும் திட்டங்களை உங்கள் சொந்த திட்டமாக நினைத்து மக்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா இன்று (ஜூன் 5) நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வேறு எந்த மாநிலத்திலும் “இத்தனை இயக்கங்கள், திட்டங்கள் இல்லை” என்று நான் அடித்து சொல்கிறேன். அந்த அளவுக்கு கடந்த 4 ஆண்டுகளில் தொலைநோக்கோடு பல முன்னெடுப்புகளை செயல்படுத்திக்கொண்டு வருகிறோம்.