சென்னை: ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா சென்னை வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிதாக தேர்வான வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதன்பின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், தா.மோ.அன்பரசன் மற்றும் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.