நீலகிரி மாவட்டத்தில் உள்ள வன உயிரினங்களுக்கு இரக்கம் காட்டுவதாக சுற்றுலாப்பயணிகள் உணவு அளிப்பதால், விலங்குகளின் வேட்டை குணம் மழுங்கி வருவதுடன், அவை விபத்துகளில் சிக்கி உயிரிக்கும் அபாயம் நீடிக்கிறது.
தமிழகத்தில் 56 சதவீதம் வனப்பரப்பை கொண்டுள்ளது நீலகிரி மாவட்டம். பெரும்பாலான பகுதிகள் வனத்தை ஒட்டியுள்ளதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு வன விலங்குகளுடன் பரிச்சயம் அதிகம்.நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாகவும் உள்ளதால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளை கண்டதும் ஆர்ப்பரிக்கின்றனர். குறிப்பாக நெடுஞ்சாலைகள், முதுமலை புலிகள் காப்பகங்களை கடந்து செல்லும் போது விலங்குகளை கண்டதும், அவற்றுக்கு உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்களது இரக்கம் இந்த விலங்குகளின் உணவு வேட்டை குணத்தை மழுங்கச் செய்து வருகிறது.