
ஹோகூர் பஹ்ரு: சுல்தான் ஆப் ஜோகூர் ஜூனியர் ஆக்கி கோப்பை தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இதில் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நேற்று மலேசியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் 22-வது நிமிடத்தில் குர்ஜோத் சிங்கும், 48-வது நிமிடத்தில் சவுரப் ஆனந்த் குஷ்வாஹா 48-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

