திஷா சலியன் மர்ம மரண வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அவரது தந்தை தாக்கல் செய்த மனு மீது ஏப்ரல் 2-ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளராக இருந்தவர் திஷா சலியன். மும்பையின் மலாட் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது விபத்து மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.