சூரத்: குஜராத்தின் சூரத் நகர் ஜவுளி சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.850 மதிப்பு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. 20 கோடி ரூபாய் நோட்டுகளும் தீயில் எரிந்து சாம்பலாகிவிட்டன.
கடந்த 1996-ம் ஆண்டில் குஜராத்தின் சூரத் நகரின் ரிங் சாலையில் பூபத் படேல், அருண் படேல் ஆகியோர் 6 மாடி கட்டிடத்தை கட்டினர். இந்த கட்டிடத்தில் 822 கடைகள் செயல்பட்டன. இது சிவசக்தி ஜவுளி சந்தை என்று அழைக்கப்பட்டது. இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து இந்த சந்தைக்கு மொத்த வியாபாரிகள் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர்.