நேற்று யுஏஇ அணிக்கு எதிரான ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இது போன்ற அர்த்தமற்ற போட்டிகளில் என்ன சுவாரஸ்யம் உள்ளது? ஆனாலும் சூரியகுமார் யாதவ் செய்த ஒரு காரியத்தினால் அது சர்ச்சையாகியுள்ளது.
யுஏஇ அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 13-வது ஓவரில்தான் அது நடந்தது. ஷிவம் துபே பந்தை சித்திக் ஆட முயன்று தோல்வி அடைந்தார், பந்து சஞ்சு சாம்சனிடம் வர சித்திக் கிரீஸுக்கு வெளியே இருந்ததால் சஞ்சு த்ரோ செய்து ரன் அவுட் செய்தார். ஆனால் சித்திக் கிரீஸிற்கு வெளியே நின்றிருந்த போது ஷிவம் துபே பந்து வீசும் போது தவற விட்ட டவலை நோக்கி கையைக் காட்டினார்.