புதுடெல்லி: சூரிய மின்சக்தி திறனில் இந்தியா 100 ஜிகாவாட் எனும் மைல்கல்லை எட்டியுள்ளதாகவும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலகளவில் இந்தியா முன்னணி நாடாக திகழ இது வழிகோலுவதாகவும் மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரஹலாத் ஜோஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் எரிசக்தி பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. சூரிய சக்தி பேனல்கள், சூரிய சக்தி பூங்காக்கள் மற்றும் கூரை சூரிய சக்தி திட்டங்கள் போன்ற முயற்சிகள் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.