ஈரோடு: கோபி அதிமுக கட்சி அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இன்றும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் 6-ம் தேதி கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகிய பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.