சென்னையை அடுத்த திருப்போரூர் அருகே 4,735 ஏக்கர் அரசு நிலத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையின் பட்ஜெட் தொடரின்போது அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தமிழக நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கோரியுள்ளது பாராட்டுக்குரியது. இன்னும் ஒரு மாதத்திற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று கூறப்படுவது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
தற்போது சென்னை மக்களுக்கு புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதன் மொத்த கொள்திறன் 13.2 டிஎம்சி.