சென்னை: சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என இந்திய பெருங்கடல் முன்னறிவிப்பு அமைப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மீட்புதுறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி கடற்பகுதிகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் இருந்து நாகை வரையிலான கடற்பகுதியில் 8 முதல் 12 அடி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் appeared first on Dinakaran.