சென்னை: கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும் மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது’ என, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: “இந்தியாவில் கடல் உணவு ஏற்றுமதியை பெருக்கவும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மீன்வளர்ப்பில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையில், சென்னையில் வரும் ஜுலை 1 முதல் 3-ம் தேதி வரை ‘பாரத் கடல் உணவு கண்காட்சி’ நடத்தப்பட உள்ளது.