சென்னை: சென்னையில் மின் பெட்டிகள் அனைத்தும் உயர்த்தி அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பேசிய விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர் ராஜா, விருகம்பாக்கம் தொகுதியில் 138-வது வார்டு எம்ஜிஆர் நகர் மற்றும் 127, 128, 129, 136, 137 ஆகிய வார்டுகளில் புதை மின் வடம் திட்டம் செயல்படுத்தப்படுமா?
சென்னையில் மழை வந்தால், ஒரு அடிக்கு நீர் தேங்கினாலே, மின் பெட்டிகள் நீரில் மூழ்கி, மின்சாரம் துண்டிக்கப்படும். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மின் பெட்டிகளின் உயரத்தை அதிகரித்ததால், மழை காலங்களில் மின் தடை இல்லாத நிலை உள்ளது. அதேபோல் விடுபட்ட பகுதிகளிலும் மின் பெட்டிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? விருகம்பாக்கம் தொகுதியில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.