சென்னை: சென்னையில் இருந்து லண்டன், தூத்துக்குடி செல்லும் 4 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். நிர்வாக காரணங்களுக்காக 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது. லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், லண்டனுக்கு செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது
The post சென்னையில் திடீரென 4 விமானங்கள் ரத்து; பயணிகள் தவிப்பு appeared first on Dinakaran.