அசோக் நகர் 11-வது நிழற்சாலையில் பேருந்து நிழற்குடை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து உணவகம் நடத்துவதால் பயணிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் அவதிக்குள்ளாவதாக உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அசோக்நகரை சேர்ந்த வாசகர் ஒருவர், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் பிரத்தியேக ‘உங்கள் குரல்’ தொலைபேசி புகார் சேவை எண்ணை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது:
சென்னை மாநகராட்சியின் 135-வது வார்டு, அசோக் நகர், 11-வது நிழற்சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில்தான் பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.