சென்னை:“அஞ்சலகங்களில் ‘இ-கேஒய்சி’ முறையில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு (ஆர்.டி.) உள்ளிட்ட சேமிப்பு கணக்குகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கணக்குகளை தொடங்க விரும்புவோர் தங்களுடைய முகவரி சான்றிதழ், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில், பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கை ‘இ-கேஒய்சி’ முறையில் தொடங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.