சென்னை: சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.40.5 கோடியில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து, ரூ.42 கோடியில் கட்டப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையம் கட்டுமான பணியினை ஆய்வு செய்தனர். மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், அரசு மனநல மருத்துவமனை இயக்குநர் மாலையப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.