மதுரை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'சென்னை உயர் நீதிமன்றம், அதன் மதுரை அமர்வில் அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக தமிழக சட்டத்துறை கடந்த ஆண்டு ஜூலை 4-ல் அறிவிப்பு வெளியிட்டது. நான் முதுநிலை சட்டப்படிப்பு முடித்து 5 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணிபுரிவதால் அரசு வழக்கறிஞர் பதவிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன்.