சென்னை: குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் 3-வது பதிப்பு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான நேற்று மாஸ்டர்ஸ் பிரிவு 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ் டரான கார்த்திகேயன் முரளி, அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான அவோண்டர் லியாங்குடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிரா ஆனது.
உலகின் 5-ம் நிலை வீரரான இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டரான ஜோர்டன் வான் பாரஸ்டுடன் மோதினார். இந்த ஆட்டம் 42-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.