சென்னை: பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணி சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை டிசம்பர் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். பூந்தமல்லி மெட்ரோ ரயில் பணிமனையில் இருந்து முல்லைத் தோட்டம் வரையில் சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கான சோதனை ஓட்டம் நேற்று இரவு நடைபெற்றது.
The post சென்னை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி! appeared first on Dinakaran.