நுங்கம்பாக்கம் நமச்சிவாயபுரம் மேம்பாலத்தின் மீது வாகனங்கள் பார்க்கிங் செய்யப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, வாசகர் ஒருவர் உங்கள் குரலில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ரமேஷ் என்பவர் 'இந்து தமிழ் திசை' நாளிதழின் 'உங்கள் குரல்' சேவையைத் தொடர்பு கொண்டு கூறியதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் வசித்து வருகிறேன். நுங்கம்பாக்கம் மற்றும் சேத்துப்பட்டு ரயில் நிலையங்களுக்கு செல்வதற்கு வசதியாக, நமச்சிவாய புரத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் தனிநபர்கள் தங்களது கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர்.