சென்னை: வாகன சோதனையில் போதைப் பொருள் கும்பலை பிடித்த போக்குவரத்து போலீஸாரை காவல் ஆணையர் அருண் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் போக்குவரத்து போலீஸாரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பாண்டிபஜார் போக்குவரத்து காவல் சிறப்பு எஸ்ஐ ஜான், தலைமைக் காவலர் விஜயசாரதி தலைமையிலான போக்குவரத்து போலீஸார் நேற்று முன்தினம் இரவு தி.நகர், ஜி.என் செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.