சென்னை: சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில், மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தியை திணிக்கும் விதத்தில் இந்தி மொழி இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன.