இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது பணிமனை அமைக்க சோழிங்கநல்லுார் – சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028-ல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுபோல, 3-வது பணிமனை சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடைேய 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.