செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியில், இதன் அருகில் உள்ள இருங்காட்டுக் கோட்டை சிப்காட் தொழிற் பூங்கா, மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்பட்டு வருகிறது.