ஹைதராபாத்: வீடு, மனை போன்ற சொத்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம், மூலதன ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ஒருவர், தற்போது ரூ.80 லட்சத்துக்கு விற்கிறார் என்றால் அவருக்கு ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது. இந்த மூலதன ஆதாயத்துக்கு அவர் வரி செலுத்த வேண்டும்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2002-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஒரு வீட்டை வாங்கினார். இந்த வீட்டை அவர் தற்போது ரூ.1.4 கோடிக்கு விற்பனை செய்தார். இந்த சொத்து விற்பனைக்கு அவர் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும்.