
சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் பேசியது சட்டப்பேரவையில் கலகலப்பை உருவாக்கியது.
இன்று சட்டப்பேரவையில் மதுரை போக்குவரத்து நெரிசல் குறித்தும், சாலைகளில் மோசமான நிலை குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பினார்.

