சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி வழக்கம் போன்று சேப்பாக்கம் மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப தரமான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இம்முறை நூர் அகமது, ஸ்ரேயாஷ் கோபால், தீபக் ஹூடாவும் சேர்ந்துள்ளனர்.