லாகூர்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவி உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இருப்பினும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரின் ‘ஒன் மேன் ஷோ’ கவனம் ஈர்த்தது.
லாகூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 363 ரன்கள் இலக்கை தென் ஆப்பிரிக்கா விரட்டியது. 28.4 ஓவர்களில் 167 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்கா அணி இழந்திருந்த நிலையில் பேட் செய்ய வந்தார் மில்லர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் அவர் ஆட்டத்தின் கடைசிப் பந்தில் சதம் பதிவு செய்தார். அவருடன் தென் ஆப்பிரிக்க அணியின் ரெகுலர் பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் ஆட்டத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இறுதிவரை களத்தில் உறுதுணையாக நின்று இருந்தால் ஆட்டத்தின் முடிவு கூட மாறி இருக்கலாம்.