எனது பேச்சால் மனம் புண்பட்ட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது சைவம், வைணவம், விலைமாதர்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. அமைச்சரின் கருத்தை கனிமொழி எம்.பி. கண்டித்த நிலையில், பொன்முடியின் திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டு திருச்சி சிவா எம்.பி. நியமிக்கப்பட்டார்.