வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 13 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிநடந்தது. 2 ஆண்டுகளுக்கு முன் பணி நிறைவடைந்து. 2023ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி முதல் டெமோ ரயில் இயக்கப்பட்டது. தற்போது அகஸ்தியன்பள்ளி- திருவாரூர் இடையே மின் வழித்தடம் அமைக்கப்பட்டு முதல்கட்ட ரயில் சோதனை ஓட்டம் கடந்த 23ம் தேதி நடந்தது.
இந்நிலையில் நேற்று 2வது கட்ட சோதனையாக அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு 120 கிமீ வேகத்தில் மின் வழித்தடத்தில் டெமோ ரயில் இயக்கப்பட்டது. இது திருத்துறைப்பூண்டி, திருவாரூர்
வழியாக திருச்சி சென் றது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மின் வழித்தடத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மின்பாதையில் அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருவாரூர் வரை பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என்றனர்.
The post சோதனை ஓட்டம் வெற்றி; அகஸ்தியன்பள்ளி- திருவாரூர் மின்பாதையில் விரைவில் ரயில் சேவை appeared first on Dinakaran.