சென்னை: ஜனநாயகம் குறித்து பேச பாஜக தலைவர்களுக்கு அருகதை இல்லை என முன்னாள் ஆளுநர் தமிழிசைக்கு மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை, எழும்பூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மக்காசோளத்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தேன். இதனடிப்படையில் வரியை ரத்து செய்த முதல்வர், துணை முதல்வர், வேளாண்துறை, நிதித்துறை அமைச்சர்கள் ஆகியோருக்கு மக்காச்சோள விவசாயிகள் சார்பாகவும், மதிமுக சார்பாகவும் நன்றி. அதேநேரம், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைக்கு காரணமான மத்திய அரசு, அனைத்து பயிர் காப்பீட்டு திட்டத்தின் சிக்கல்களை களைவதோடு, குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்து விவசாயிகளை காக்க வேண்டும்.