லண்டன்: லண்டனின் சவுதம் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேறும் போது, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் அவரின் வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பாதுகாப்பு அத்துமீறலை சுட்டிக்காட்டி ‘ஜனநாயக சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக’ இந்தியா சாடியுள்ளது
இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தில் பிரிட்டன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். புதன்கிழமை இரவு சவுதம் ஹவுஸில் திங்க் டேங்க் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று, “உலகில் இந்தியாவின் எழுச்சியும் பங்களிப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.