சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் ஜப்பான் நாட்டில் மே மாதம் வெளியாகவுள்ளது.
தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மாநாடு’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இப்படம் மே மாதம் ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறும்போது, “நல்ல படம் என்பது ஓர் அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும்.